You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Thursday, December 30, 2010

கவலையை விடுங்கள் கந்தவேற்பெருமான் வழிக்காட்டுகின்றான்




“சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயும்நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே” {கந்தர் அனுபூதி}
முருகா !!!! நான் சிறியவன், வழியறியேன், எமன் என்னை கைபற்றும்முன் நீ என் கரம் பற்றி உன் திருவடிகளிலே என்னை சேர்த்துக்கொள்,இந்த ஏழைக்கும் சிவஞானயோகத்தை உபதேசம் செய் என்று உயர்ந்த உயிர் பிச்சையை நமக்காக வேண்டுகின்றார் ஆசான்.அருண்கிரியார்.
புராண வரலாறு ஈசனின் நெற்றிக்கண்ணில் கந்தன் உதித்ததாக கூறுகின்றது,ஆணும் பெண்ணும் ஸ்பரிசமாகமல் தோன்றியவன் முருக்கடவுள்..யோக மார்க்கத்தில் தன் ஜீவசத்தாகிய விந்தை கட்டியவர்களுக்கு சுவாசம் மேல்கதியாக ஊர்த்துவகதி ஏற தொடங்கும் அப்பொழுது சுழுமுனைவாசல் என்கின்ற நெற்றிக்கண் திறக்கும் இதற்கு லலாட சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு.மீண்டும் புராணத்திற்கு வருவோம், சிவப்பரம்பொருள் ஒரு தருணம் காமனை எரித்ததாக ஒரு செய்திவரும்.இதன் சூக்குமம், ஒரு காலத்திற்கு பிறகு, காமத்தீயை யோகத்தீயாக மாற்றினால் ஞான வாசல் திறக்கும் என்பது ரகசியமாகும்.
இந்த இடம் கந்தப்புராணத்தின் ஒரு உச்சம்......கைலாயங்கிரிநாதனை தரிசிக்க வேண்டி ப்ரம்மதேவர் கைலைக்கு செல்கின்றார், அப்பொழுது அங்கு வீரபாகு தேவர்களுடன் முருகப்பெருமான் வழியில் அமர்ந்திருக்கின்றார். முருகப்பெருமான் ப்ரம்மாவைப்பார்த்து ஸ்வாமி வணக்கம் என்கின்றார் அதற்கு ப்ரம்மா கண்டும் காணாதவர் போலே தொடர்ந்து கைலையை நோக்கி நடக்கின்றார்.இந்த செய்கை முருகப்பெருமானுக்கு அதிசயத்தை உண்டு பண்ணியது.சிலகாலம் பொறுத்து ப்ரம்மா மீண்டும் அந்த வழியை கடக்கின்றார் பரமேஸ்வரனை தரிசனம் செய்துவிட்டு.
முருக்கடவுள் மீண்டும் வணக்கம் ஸ்வாமி என்கின்றார் அப்பொழுதும் ப்ரம்மா தலையை மட்டும் அசைத்துவிட்டு இருமாப்புடன் தன் நடையை தொடர்கின்றார்.அக்கினியில் பிறந்தவன் ஆயிற்றெ ஆறுமுகப்பெருமான்,வந்ததே கோபம்......
முருகப்பெருமான் :- ஸ்வாமி சற்று நில்லுங்கள்,யார் நீங்கள்
ப்ரம்மா :- என்ன வேடிக்கையாக இருக்கின்றது என்னையா யார்
என்று கேட்கின்றாய்?
ப்ரம்மா :- நாம் படைத்தல் தொழில் புரியும் கடவுள்
முருகப்பெருமான் :- அப்படியா சரி ,அப்படி என்றல் உங்களின் தகுதிதான்
{qualification} என்ன?
ப்ரம்மா :- நாம் சகல வேதசாஸ்திரங்களையும்
கற்றுத்தேறியுள்ளோம்
முருகப்பெருமான் :- ஓ!! ஆகட்டும், அப்படி என்றால் படைப்பிற்கு மூலம்
எது ?
ப்ரம்மா :- படைப்பிற்கு மூலம் ஓங்காரம், ஓங்காரத்தை வைத்தே
அனைத்தையும் படைக்கின்றேன்
முருகப்பெருமான் :- அப்படி என்றால் ஓம்காரத்திற்கு அர்த்தம் கூறும்...
{ இதில் ஒரு வேடிக்கை உள்ளது, ஓம்காரமே ஓங்காரத்திற்கு அர்த்தம் கேட்கின்றது }
ப்ரம்மா விழிக்கின்றார், முருகன் ப்ரம்மாவை சிறைவைகின்றார்.
படைத்தல் தொழில் ஸ்தம்பித்து விடுமோ என்று தேவர்கள் அஞ்சி சிவப்பெருமானிடம் முறையிடுகின்றார்கள்.கைலாயநாதன் முருகனை நோக்கி வருகின்றார்.
ஈசன் :- அப்பா ! ஏன் நான்முகனை சிறைவைத்தாய் ?
கந்தக்கடவுள் :- அவன் தொழில் தகுதியில்லாமல் படைப்புத்தொழிலை
ஆற்றுகின்றான் ஆகையால்தான் அவனை சிறைவைத்தேன்
தந்தையே, மேலும் தொடர்கின்றார்.. அப்பா நீரில் குளிக்கும்
முன்பு உடலில் அழுக்கிருக்கலாம் ஆனால் குளித்தப்பின்பும்
அழுக்கு இருக்கின்றதென்றால் அந்த நீரை
அவமதிப்பதாக தானே அர்த்தம் அதுப்போல
இறைவனாகிய உன்னை பார்ப்பதற்கு முன் ஆணவம்
இருக்கலாம் ஆனால் உன்னை வழிப்பட்டு
தொழுதப்பிறகு ஆணவம் அஹங்காரம் எல்லாம்
அழிந்திருக்க வேண்டுமே அதுத்தானே வழிப்பாட்டின்
அடிப்படை உண்மை ஆனால் இறைவனாகிய உங்களைப்
பார்த்தப்பிறகும் தனக்கு ஆணவம் தலைகணத்து நின்றதே
அதன் காரணமாகத்தான் நாம் அவரை சிறைவைத்தோம்
தந்தையே........ என்றார் தகப்பன்சாமி !!!

ஈசன் அப்பா ஏன் நான்முகனை சிறைவைத்தாய்
கந்தக்கடவுள் அவன் தொழில் தகுதியில்லாமல் படைப்புத்தொழிலை
ஆற்றுகின்றான் ஆகையால்தான் அவனை சிறைவைத்தேன்
தந்தையே, மேலும் தொடர்கின்றார்.. அப்பா நீரில் குளிக்கும்
முன்பு உடலில் அழுக்கிருக்கலாம் ஆனால் குளித்தப்பின்பும்
அழுக்கு இருக்கின்றதென்றால் அந்த நீரை
அவமதிப்பதாக தானே அர்த்தம் அதுப்போல
இறைவனாகிய உன்னை பார்ப்பதற்கு முன் ஆணவம்
இருக்கலாம் ஆனால் உன்னை வழிப்பட்டு
தொழுதப்பிறகு ஆணவம் அஹங்காரம் எல்லாம்
அழிந்திருக்க வேண்டுமே அதுத்தானே வழிப்பாட்டின்
அடிப்படை உண்மை ஆனால் இறைவனாகிய உங்களைப்
பார்த்தப்பிறகும் தனக்கு ஆணவம் தலைகணத்து நின்றதே
அதன் காரணமாகத்தான் நாம் அவரை சிறைவைத்தோம்
தந்தையே........ என்றார் தகப்பன்சாமி
இன்று வழிப்பாட்டின் நிலை நாட்டாமைக்கும் தலைவர்களுக்கும் இறைவன் காக்க வேண்டிய அவலம், நல்ல வேலை முருகப்பெருமான் தற்பொழுதும் தன் சுட்டிதனத்தை தொடர்ந்திருந்தால் பல தலைவர்கள்
சிறைசாலைகளில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.
இப்படியாக பல உண்மைகள் முருக வழிப்பாட்டில் பொதிந்துள்ளது
முருகனின் பெயரிலேயே அத்துனை ரகசியம் அமைந்துள்ளது, முருகு
{மு} மெல்லினம் ரு இடையினம் கு வல்லினம் தமிழ் த வல்லினம் மி மெல்லினம் ழ் இடையினம், இது முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள உயிர் பந்தமாகும் மேலும் முருகா என்பதை கடை எழுத்து
மாற்றினால் காமுரு என்று வரும்..இதை காமுரு..காமுரு..காமுரு என்று தொடர்ந்தால் போல் கூறினால் முருக முருக முருக என்று ஒலிக்கும்.காமுருதல் ஆசைபடுதல் என்று அர்த்தம் கொள்ளலாம்..திருமூலப்பெருமான் கூறுவதுப்போல் “ஆசை விட விட ஆனந்தமாமே.....”ஒரு விந்தைப் பாருங்கள், பழனி முருகன் ஆண்டிக்கோலம் உடையவன், எதுவுமே வேண்டாம் என்று சென்றவன் ,ஆனால் அவனை நாடித்தான் கோடிக் கோடியாக சொத்து குவிகின்றது..எதுவும் வேண்டாமென்றால் எல்லாம் வரும் சூத்திரத்தை அறிந்தவன் அவன் ஒருவனே..அதுமட்டுமல்ல அவனை
உளமாற உயிராக வழிப்படுபவர்களுக்கும் அவன் அந்த சூக்குமத்தை உணர்த்துகின்றான்..அகத்திய பெருமான் தொடங்கி 1940 களில் வாழ்ந்த தவராஜசிங்கம் சித்தயோகி சிவானந்த பரமஹம்சர் அதன் பின் வாரியார் ஸ்வாமிகள் வரையிலும் அந்த சூத்திரத்தை அறிந்தவர்களாவார்கள்.
அகத்தியருக்கு தன்னையே தமிழாக்கிக் தந்தவன்,அருணகிரிக்கு வாய்மணக்கும் சந்தத்தமிழை கொடுத்தவன்,குமரகுபரருக்கு பிள்ளைத்தமிழாய் கந்தர்கலிவெண்பாவை பாடவைத்தவன்,தேவராயா ஸ்வாமிகளுக்கு நாளும் காக்கும் சஷ்டிகவசத்தை அருளியவன்,இந்தக்காலக்கட்டத்தில் ஏதாகிலும் அற்புதம் நடைபெற்றுள்ளதா என்று கேட்கின்றீர்களா? சத்தியமாக உண்டு,
இம்மலை திருநாட்டில் இலைமறை காயாய் வாழ்ந்துவரும் மூத்தத் தமிழறிஞர் ஆன்மீக சித்தாந்த சாகரம், சாக்தஸ்ரீ. டாக்டர்.சி.ஜெயபாரதி அவர்கள் முருக வழிபாட்டில் பல அனுபவங்களையும் அற்புதங்களையும் கண்டவர்கள்.ஆயக்கலைகள் 64ல் ஏறக்குறைய 30 கலை நுட்பங்களை முருகப்பெருமானின் அருளால் கிடைக்கப்பெற்றவர்.அடியேன் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஓர் உண்மைத் சன்னியாசி {சர்வ நாசம் சன்னியாசம் ஆனால் இன்று சன்னியாசிகள் தான் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கிகிடக்கின்றார்கள் இது கலியுக கன்றாவி போலும்} அவர் குண்டலினி யோகியும் கூட ஆவார் 50களில் கதிற்காமம் செல்ல வழித்தடுமாறியப்போது வயதான கிழவனாக தோன்றி பாதை காட்டி மறைந்த அற்புதம்,இப்படி பல பல உண்டு..
வரும் தைபூச நன்னாளிள் கந்தவேள் பெருமானை நினைந்துருகி ஆர்பாட்டாமில்லாமல் ஆடம்பரமில்லாமல் உண்மைசரணாகதியுடன் அவனை நினைந்து கண்ணீர் விட்டு அழைத்துப்பாருங்கள் வேலும் மயிலும் உடன் வருவதை உண்மையாய் உணர்வீர்கள்...
.
உபதேசம் பெறவோ அல்லது ஞானதீக்கை பெறவோ இரண்டு ஒளி நாட்களை திருமூலப்பெருமான் தம் திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார் ஒன்று தைபூசம் மற்றொன்று வைகாசி விசாகம் ஆகையால் வருகின்ற தைபூச நாளன்று முருகனின் சன்னிதானத்திலோ அல்லது தாயின் ஆசியுடனோ கீழ்கண்ட மந்திரத்தை ஜபிக்க தொடங்குங்கள் செந்திற்பெருமான் எமன் வரும் வேளை சக்திவேல்கொண்டு உடன் வந்து அணைப்பது உறுதி ..
ஓம் ஐம் ரீம் வேல் காக்க காக்க இது பாம்பன் சுவாமிகள் அருளிய அதி அற்புதம் வாய்ந்த கவச மந்திரமாகும்
சிவனும் இவனும் ஒன்று-உயர்
சிந்தை செய்பவர் தமக்குள்
ஆனந்தமாய் ஒளிர்{வான்}- உயிர்
உச்சிவெளி தனக்குள் நின்று

Saturday, December 25, 2010

Om Gam Ganapathaye Namaha



ARUGAMPULL {Botanical name :-CYNODON DACTYLON}
When we say Arugampull our mind immediately will goes Lord Ganesha.Once a upon a time there was asura called Analasuran and given so much of adversities to Deva's.In many ways they attempted failures to overcome his tortures,finally Devas seek ed help from MahaGanapathy.The battled war started and Analasura was equally strong as Mahaganapathy and the final encounter lord Ganesha made his body tremendously huge and swallowed Analasura.The meaning of Analasura is Anal means flame so once Lord Ganesha swallowed him his body has become extremely heaty and he was suffered from the inner heat.As per Brammas advise all the Deva's started performing maha abhisegam
with a green grass called Arugam....finally the effects of the extreme heat was reduced and disappeared.Now moral of the story any kind of heat which the body is stimulating can be reduced by this grass.According to puranas Arugampull is the first grass which grounded in our mother earth.

What are the common disease can be cured by Arugampull :-
Balancing our immune system,
function as blood purifier,controls BP,reduces brain heat,clears white discharge (ladies),helping to cure skin disorders,controls beginning stage of cancer,heals urinary infections.

How to use :- for daily use we can consume 2 capsules morning and evening before food.This is for general health and metabolism.For serious diseases the usage will be slightly different whereby 90ml of juice morning,afternoon and evening before food at lease for 90 days.One may follow vegetarian diet during the 90 days period will see a excellent result.Those who have eczema,itchiness or rashes a handful of Arugampull,a small piece of fresh turmeric one number of lime fruit juice,blend all to gather and apply all over the body or on the effected areas,leave for 30 minutes and take warm bath, for good result twice a week for 3 months.Evan dry grass can be use as a head resting mat while sleeping, good for the brain and nerves.See you with another herb soon....May God Bless...

Wednesday, December 15, 2010

ஆனந்த தாண்டவம்



சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாளும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்
சிவ சிவ என்ன சிவகதித் தானே {திருமந்திரம்}

சிவ சிவ என்கின்ற நாமத்தை சதா ஜெபம் செய்துக்கொண்டிருந்தால்
வினைகள் அழியும் என்கின்றது திருமந்திரம்..வரும் 22ம் தேதி காலை ஏறக்குறைய 3.15 தொடங்கி 5.00 மணி வரை நம் பூமியில் ஒரு
மிக விஷேஸமான ஒரு நிகழ்வு நடக்க உள்ளது அதை நம் முன்னேர்கள் சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் என்கின்றார்கள் அல்லது ஆதிரை திருநாள் அல்லது ஆருத்ரா தர்சனம் என்றும் அழைப்பார்கள்.தமிழ் நாட்டில் சிதம்பரமாகிய ஆகாச பூத ஸ்தலத்தில் இந்த நிகழ்வு வருடாவருடம் நடைப்பெருகின்றது.விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால் இன்றைய தினம் நம் வானவெளியில் திருவாதிரை நட்சத்திர மண்டல விண்மீகள்,பூமி மற்றும் நிலவு ஒரு கோட்டில் தன் சஞ்சாரத்தின் போது நிற்கும்,இது வடகிழக்கு திசையில்
நிகழும்..புராண ரீதியாக பார்த்தால் வடகிழக்கு திசையில்தான் சத்தியலோகம் இருப்பதாக கூறுகின்றார்கள்.அன்று மிக அதீதமான அருட்காந்த சக்தி நமது பூமியை நோக்கி வரதொடங்குகின்றது,அன்றைய தினம் நாம் தியானம் மற்றும் மந்திர ஜபங்களை செய்ய ஆரம்பித்தல் நமது முன் வினைகள் நீங்கும் என்று சித்தர்பெருமக்கள் கூறுகின்றார்கள்...மேலே இருக்கும் படம் நமது வானவெளியில் அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பாகும்..சற்று ஆழமாக அதை உள்னோக்கிப்பார்த்தால் சிவப்பெருமானின் ஆனந்த தாண்டவ அமைப்பை காணமுடியும் இது நாசா விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்ட படமாகும்....இன்னும் நிறைய உண்டு பிறகு ஒரு நாள் விரிவாகப் பார்ப்போம்....

Tuesday, December 14, 2010

COSMIC DANCE (Arudra Darshan)




COSMIC DANCE OF LORD SHIVA
(ANANDA THANDAVAM)
A science of Arudra festival
ARUDTRA DARSANAM (Athirai thirunaal) which is falling on 21st night 22nd early morning at 4am of December 2010..The purpose of human life on the earth according to Eastern methodology is back to state of Nature means elevate to the higher consciousness of eternal bliss (SAT CHIT ANANDA).To elevate towards this consciousness, one must be able to connect himself with the higher consciousness, without dropping our karma and samskaras its impossible to attain this stage....
A thought is leading to an action and an action is producing a reaction (law of-cause and effect) those reaction is forming a strong imprint in the ether (Akash) and in our subconscious (chittam) as well. The cycle continuously repeating in many births as we know. If the mind is keep on repeating the same phenomena means it has already been programmed very deeply in our subconscious stage..The way to get rid of this unwanted subconscious routine one must have a strong mental awareness call athma Viccharana simple means the balance between mind and intellects (Manas & Arivu).
There are some events are occurring in our cosmic due to the positions of constellation's and planets in our galaxy .One of the event called ARUDRA DARSAN..In Hindu astrology we have 27 nakchatiras (constellation)Aswini-Revaty,among this 27 constellation THIRUVATIRAI (ORION )nakchatira is the biggest and bright full star and its belongs to Lord Siva..
On Arudra day Orion star groups is forming a design in our sky and it’s similarly looks like the dance of lord Nataraja(see the pictures below).This will appear in South-East (ESAANYA THISAI) direction on our galaxy. During on that night our Moon, Earth and Orion star groups will be in a straight vertical line in their position. As I said the occurring of this phenomenal event on the sky producing a strong DIVINEMAGANATIC RADIATIONS from South-East direction which our Satyaloka located according to our Puranas or spiritual location of higher celestial beings...
During this period, performing poojas,meditation or mantra chantings will gives a tremendous spiritual and mental strength.Scientifically ORION group of stars very much contained of Sodium,Magnisium and Iron which needed in our body .Magnisium and Iron is important to form the blood cells.On this day the rays from those combination will directly effect on our body and brain therefor our anssestors discovered performing any spiritual or metapsychic rituals will demolish our past life blueprint in our subconscious leval.

Thursday, December 9, 2010

பெண்கள் 4 வகை



Ancient Hindu Tantric Texts have classified women in four distinct categories or types, depending upon the most distinct or differentiating inborn traits commonly found in women


Padmini or Lotus- woman- This type of woman is soft, tender and beautiful and has a soft smooth and flawless complexion. She wears expensive clothes and jewellery.

Chatrini or Art- woman –She is of medium built, lean and has an artistic temperament. She is found of pleasure and all those things which are artistic in nature.

Shankhini or Conch-woman –She is well built and has a fiery temperament. She can be rude and heartless. She is a passionate and domineering woman, prone to sudden bursts of passion.

Hastini.or Elephant woman – She is thick limbed and has no prejudices, is easy to please and requires a lot of sexual activity to please her. She can be coarse and rough.

Wednesday, December 8, 2010

திடமான சங்கல்பத்தின் ஆற்றல்


மகான்களாக சிலர் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். அறிவுத்திறனும், அன்பும் நிறைந்தவர்கள் கிடைப்பது சற்று கடினம் என வரலாறு சொல்லுகிறது. நம்முடைய காலக் கட்டத்திலேயே வாழ்ந்து மரித்தவர் வேதாத்திரி. மகரிசி வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்களை படிக்க நேர்ந்தது. அதல் பகிர வேண்டும் என்று தோன்றியதை இங்கு பதிக்கிறேன்

“ஒருநாள் ஒரு நண்பர் மகரிசி ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.

“அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிசி.

“முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டிகழித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”

“நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே!.பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “

“நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”

“உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”

“ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”

“உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்

நீங்கள் நல்லவிதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”

இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டேன்.வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வழுப்பெற்றவுடன் இந்த தவறை விட்டுவிடுவீர்கள். என்று கூறினார்.

ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெரும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குருதட்சனையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.
“இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.

உடனே மகரிசி “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.

அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.

மகான்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழிவகை செய்பவர்கள். அதைதான் மகரிசியும் செய்துள்ளார்

Thursday, October 28, 2010



This mudra called GARUDA MUDRA or Eagle gesture.This particular mudra will enhance our metabolism and immune system and also sharpen our concentration ability.This also helps to reduce our lethargic and tiredness gradually.Giving a good strength for our gums and teeth's.For best result should practice in empty stomach or before food 10-15 minutes by sustain in the gesture.A suggestion, one may practice a deep breathing while doing this.There is also a precise mantra for this mudra but only can revealed in person if its necessary..all the best and soon with another mudra..

Secret of Mudras....


According to siddha medicine our body are the composition of five basic elemental forces and the compositions are Earth,Water,Fire,Air and Ether.In human anatomy, siddhars has described that 72000 nerves are rooted all over our body which divided 36000 from head to toe each left and right sides...due to an individual ...body conditions and immunity metabolism we are caught by diseases.
Siddhars has found many ways to protect our self from all this physical disasters.One of the techniques are called mudras (gesture),means some patterns which we can design with our fingers .What is the scientific significant in mudras?.
In our body all the nerves are grounded in few places like palms,feet's,ear lobes and head top.By giving a appropriate pressure towards this areas, one may able to give a proper blood circulations and bio-magnetism energy to activates the related organs of our body.
All the nerve system which are all over the body are connected with all the major and minor organs and as i said all the nerves ending points are mentioned belowed
By a proper activations of this elemental centers one might get rid of physical ailments and paints and Even able to attain high level of spiritual consciousness.Here I'm gonna share some preliminary ways of practicing the mudras.As far i concern there is no any restriction for the basic methods, all that needed is commitments and regular practice In my research, if someone going to follow this healing mudras seriously, i would like suggest to monitor on their daily diets and regular exercises.This may gives better result and recoveries.Especially some simple breathing techniques will help to build good metabolism during this mudra practice.
There are many mudra styles occurred in all the traditions around the world but India is the pioneer of all this tantra mystics.Here im going to share some Tibetian mudra teq, and our Yogic teq. as well in this article.......Health is wealth.....

Tuesday, October 12, 2010

just a sharing on this Navarathiri a powerfull mantra given by my master..


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர
மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய
நமஹ!
om sreem hreem kleem maha astha aiswarya sambath aathikka maha kubera manggala sarva bhaakiya sutharsana sanggu sakra pathma khaathaa yutha laxmi naaraayana thevaaya namaha

2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
om sreem hreem kleem,kleem hreem sreem astha aiswarya sambath yoga amsa kubera sakravarthi thevaaya namaha

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem sarva raaja vaseegara yoga kubera thana thanniya sambath vasiya aiswarya kubera thevaaya namaha

4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
om sreem hreem kleem mano thairiya vaakku nyaana vasiya veera kubeera thevathaayai namaha

5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem sarva thejo lakchana keerti vasiya maha jaya vijaya kubera thevaya namaha

6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem sarva kaariya sitthi vasiya jaya theevaya namaha

7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய
நமஹ! om sreem hreem kleem maha jaya vijaya amsa kubera sakravarthi theevathaaya namaha

8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem thana kubeera theevaaya namaha

9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ
om sreem hreem kleem nyaana kubeera theevaaya namaha

10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
om sreem hremm kleem veera kubeeera theevaya namaha

11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem yoga kubeera theevaaya namaha

12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem sarva soubhaaakiya kubeera theevaya namaha

13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem thejas kubeera thevaaya namaha

14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
om sreem hreem kleem sarva jana vasiya kubeera theevaaya namaha

15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!
om sreem hreem kleem ghaantha sakthi theevaaya namaha

16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!---
om sreem hreem kleem jaya vijaya theevaaya namaha


A powerful kubera mantra to overcome our material blocks and financial constrain..

Tuesday, October 5, 2010

மனத்துக்கண் மாசிலன்....



பொதுவாக தூய்மையை விரும்பாத மனிதர்களே இல்லை என்று நாம் கூறலாம்.மனிதன் எதிலும் எங்கும் சுத்தத்தை விரும்பக் காரணம் தூய்மை இன்பமயமானது ஆனந்தமயமானது.உடையில் சுத்தம்,படுக்கும் அறையில் சுத்தம்,வாகனத்தில் சுத்தம்,ஆபீஸ் அறையில் சுத்தம்,உணவு உட்கொள்ளச்செல்லும் உணவகங்களிலும் கூட சுத்தமானதையே நாடி போகின்றோம்...சுத்தம்..சுத்தம்..சுத்தம்..! "சுத்தம் சுகம் தரும்" என்கின்ற பழமொழிக்கூட உண்டு.மனிதன் இயற்கையிலேயே இதன் வசம் இருக்கின்றான்.
அசுத்தம் உள்ள இடத்தை மனம் சிறிதும் நாடாது..ஆக ஆறறிவு மனிதன், தூய்மையை எப்படி நாடி ஈர்க்கப்படுகின்றானோ, அப்படியே! பேரறிவாகப்பட்ட இறைவன்
தூய்மையான உள்ளத்தை நோக்கி வருகின்றான்...இப்பொழுது கூறுங்கள் கடவுளை அடைய ஏன் சிரமப்படுவானேன்......பௌதிகப்பொறியியல்{physics} விஞ்ஞானத்தில் காலியான இடத்தை நோக்கி சக்திப் பாய்கின்றது என்று கூறுகின்றார்கள்...இது உண்மையாக இருப்பின், மெய்ஞான விஞ்ஞானத்தில் காலியான மனதில், கள்ளகபடமற்ற மனதில், ஏன் இறைசக்தி ஈர்க்கப்படாது?????உள்ளே குப்பைகளை வைத்துக்கொண்டு எத்தனை ஆன்மீக அடையாளங்களை அணிந்துக்கொண்டாலும் பயின்றாலும் என்ன பயன்?
இதை வள்ளுவப்பெருந்தகை இப்படிக் கூறுகின்றார் "மனத்துக்கண் மாசிலன் ஆதலால் அனைத்தறன் ஆகுல நீரப் பிற" மனத்திலே மாசுக்கள் இல்லாத தன்மையே எல்லா
அறத்திற்கும் தலையாயது....

மரணமும் கூட மாய்ந்துப்போகும்


மரணத்தை நோக்கிய மனித வாழ்வில்
எத்தனை எத்தனை மர்மங்கள்?
மாதவத்தோர் மரித்தல் அவலம் என்கின்றார்கள்,
மானிடரோ மரணம் சாஸ்வதம் என்று வாதிக்கின்றார்கள்
மரணமாகட்டும் மஹாசமாதியாகட்டும்
மனிதனே இப்பொழுது உன் நிலை என்ன?
இந்த நிமிடம் உன்னை கடந்துச் சென்றுவிட்டால்
நீ மரித்துவிட்டாய்..
இந்த நிமிடத்தில் நீ வாழ்கின்றாய் என்றால்
நீ மரணத்தையும் மாய்த்துவிட்டாய் !!!!!!!

Sunday, September 12, 2010

உயிர் காதலிக்கு ஒரு கவிதை


என் தாய், இறுதிவரை வரமாட்டாள் என்பதை உணர்ந்து, அன்றே
உன்னை எனக்கு தாரமாக்கி விட்டாள் போலும் - உன்
பந்தம் உண்மையிலேயே கருவறையில் மலர்ந்த சொந்தமடி

நான் வாழ வேண்டுமென்று நீ துடித்த துடிப்பிற்கு
இதுவரை கணக்கு ஏதடி?
ஒரு முறையாவது உன்னை தொட்டிருப்பேனா
அல்லது "உயிரே,..இதயமே..என் காதலியே....." என்று
நலம் விசாரித்திருப்பேனா ?

என் வருகையை எதிர்பார்த்து எத்தனை நாள்
நீ ஏங்கியிருப்பாய்
காலம் முழுதும் உன்னை ஏங்கவைத்த
கேவலமான பாவியடி நான்...
சுயநலக்காரன் இவன், என்று தெரிந்தும்-நான்
வாழவேண்டுமென்று நீ துடித்தாய்

என் மீது எத்தனை காதல் தான் உனக்கு,
இறுதிவரை உன்னை துடிக்க விட்டபோதும்
என்னை நீ ஒரு போதும் நீ துடிக்க விட்டதில்லையே இதயமே!
போடி போடி பயித்தியக்காரி!!!!

உன் உயிர் துடிப்பை அந்த ஆண்டவன் மட்டுமே
அறிந்திருப்பான்
என்னை வாழவைத்த என் காதலியே...
என் உயிரே..... என் ஜீவனே....
காலதேவனின் ரெஜிஸ்டர் புத்தகம்
எனக்கு நாள் குறித்துவிட்டது

இதயமே !!!!!!!இதயமே !!!!! நான் வாழ நீ துடித்தாய்
நீ வாழ பாவி நான் ஒருபோதும் நினைந்ததில்லையே
மனம் திறந்து ஒன்றுக் கேட்கின்றேன்???
என்னை மன்னிப்பாய??? ஒருமுறையாவது
உன்னோடு என்னை அணைத்துக்கொள்வாயா???
உன் உயிரின் நாதத்தில் கலக்க இப்போதாவது
எனக்கு அனுமதிக்கொடு......please.....please.......please

அப்பாவி இதயமே!!!!!என் சொந்தமே!!!!
நான் உறங்கும் போதெல்லாம் நீ விழித்திருந்து, எனக்கு
உயிர் பிச்சை கொடுத்தாய்--ஆனால்
இன்று நீ துடிப்பதை நிறுத்தி விட்டாய் நான்
நிரந்தரமான உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.......

(எது இல்லை என்றால் காதல் இல்லையோ,உயிர் இல்லையோ
அந்த இதயத்திற்கு இந்த கவிதை சமர்ப்பணம்...காதலர்கள் தினத்தில், காதலை ரோஜாப்பூவால் பண்டமாற்று வியாபாரம் செய்யும் கோமாளிக்காதலர்களே, உங்களுக்கு ஒரு செய்தி ,ரோசாவிலும் மொன்மையானது இதயம் , அதையும் சற்று காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், காரணம் அது தான் உங்கள் வாழ்க்கையின் ஜீவநாதம், உன்னை வாழவைக்கும் இதயத்தை முதலில் காதல் செய் அதன் உயிர் துடிப்பை உணர்வதற்கு முயற்சிசெய்...)

Saturday, September 11, 2010

The mystics of sound (நாதப்ரம்மம்)


Sound is the vibration of air molecules,which we measure by pulses per second,or hertz.The vibrationf of molecules create solidity,sound,colour,light and all living beings.Light vibrates at a very high frequency manu octaves above sound waves.White light is a frequency range(like sound) called the visible light spectrum (VLS),which breaks down into color.RED is the lowest frequency,violet the highest,and it goes
red,orange,yellow,green,blue,indigo,violet.This means you resonate with higher frequencies by wearing violet and lower frequencies by wearing red.
Which is why Saints wear violet robes and barflies wear red dresses.THese simple octives underlie all matters;Everything is made of vibrations.Once this is fully comprehended,it makes sense that the many dimentions could form in planes where certain frequencies vibrate.We cannot see or hear extremely high dimentions,just as we cannot hear sound much above the range of the piano keyboard.But literally anything could be vibrating in these higher zones,but such things would not be physical as we are in 3D.

Friday, September 3, 2010

ஈழத்து தமிழச்சிக்கு எங்களின் உயிர் வணக்கங்கள்


பூமி பந்தில் சற்று வித்தியாசமான தாய்மார்கள் இவர்கள்,
குழந்தைகளை பெற்றுக்கொண்டதனாலேயே, தாய்மை பதவி அடைந்துவிட்டவர்களைதான்
இதுவரை உலகம் அறிந்திருக்கும், இது காமத்தின் கட்டாய சொகுசு
காலதேவனுக்கு இரையாகப்போகும் பரிசு -ஈழத்து தமிழச்சி
தமிழ் உணர்வையும் வீரத்தையும் ப்ரசவித்துவிட்டு
கன்னிகளாகவே உயிர் துறந்தவர்கள்,
கன்னித்தாய்மார்களே!!! மீண்டும் ஒரு பிறவிவாய்த்தால்
உங்கள் கருவறையில் ஒரு முறையாவது
படுத்துறங்க வாய்ப்புகொடுங்கள்....
அப்படியாவது இனி எங்களுக்கு தமிழ் உணர்வும்
வீரமும் பதியட்டும்..அடிமை விதி மடியட்டும்.....
எங்களின் உயிர் வணக்கங்கள்........

Sunday, August 29, 2010

பெண் விடுதலை வேண்டும்!!!!!!!!


நடந்தது என்ன? தோழர்களே !அந்த (face book) ஒளிப்பதிவை பார்க்கும் பொழுது, இது எதார்த்தமாக நடந்த ஒரு அவல சம்பவமாகவே தெரிகிறது.சில விசயங்களை நாம் சற்று நிதானித்துப் பார்த்து, இதற்கு ஒரு கட்டாய முடிவை, எடுத்தே ஆகக்கூடிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்....செய்த செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதும் விசாரணைக்குரியதுமாகும்...இனி இந்த நாய்களின் செயல் மீண்டும் சபைக்காணக்கூடாதென்றால் ! அந்த மனித மிருங்களின் அசுர அராஜகங்கள் அரங்கேற்றம் காணக்கூடாதென்றால்! சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோல்,உங்களின் தன்மானத்தையும், உங்களின் கௌரவத்தையும் நீங்கள் காக்க,
இது போன்ற கோமாளிகளிடம் தரம் பார்த்துப் பழக ஆரம்பியுங்கள்.பாரதிக் கண்ட புதுமை பெண்ணாக நீங்கள் ஏன் மாறக்கூடாது...பெண் விடுதலை வேண்டும் என்று முழங்கிய அந்த தெய்வக்கவிஞனின் வாக்கு இந்த மலாயா மண்ணில் பொய்யாகிவிட்டதா?????.

சகோதரிகளே ! நாளை இரவு இந்த மண்ணிற்கு கர்ப்பச் சுதந்திரம் கிடைத்த நாள்,ஆனால் அது பொய்யாகிவிட்டது!!!!!!!! பட்டப் பகலிலே, பலர் நடமாடும் இடத்திலே, ஒரு மிருகம், அந்த இரு பெண்களிடம் தன் கைவரிசையைக்காட்ட, மற்றொரு மிருகம் இதை ரசிக்க,பிரிதொரு மிருகம் ச்சி... ச்சி.. ச்சி!!!!..அது அதைவிட கேவலமான ஒன்று, பதிவு செய்ய,அரங்கேற்றம் கண்டது அந்த அவலச்சம்பவம், ஒருக்கால், அந்த இரு பெண்கள் அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்டிருக்கலாம் முழுமையான சம்பவம் தெரியாது, ஆனால் இது ஒரு விளைவின் எதிர்விளைவாகும்.காரணம் பகிரங்கமாக பட்ட பகலிலே இதை பதிவு செய்யக்கூடிய அளவிற்கு அவர்களின் உணர்ச்சிகள் தூண்டப் பட்டிருக்கின்றனவெற்றால், நிச்சயமாக அந்த ஆணாதிக்கத்தை காட்டிய மிருகம், ஏதோ ஒரு அதீத மன பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக் வேண்டும் .இதன் விளைவுத்தான் இந்த ஒளிப்பதிவு.
சகோதரிகளே ! இரண்டு விசயங்களை சிந்திக்க மறந்து விடாதீர்கள் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்கியமே.." உங்களின் வரையறையை நீங்கள் தயவு செய்து வகுத்துக்கொள்ளுங்கள்,இரண்டாவது,நீங்கள் கோழைகள் அல்ல, மறந்து விடாதீர்கள், நினைத்தால், அவர்களையே நீங்கள் காலிலும் விழவைக்க முடியும்.பெண்ணுரிமைக்கு புறம்பான செயல் இது, இனியும் காலம் தாழ்த்தாது, பாவப்பட்ட அந்த இரு சகோதரிகளுக்கு உரிமை குரல் கொடுக்க ஒன்றுக்கூடுங்கள்.
சம்பவம் எதுவாகவே இருக்கட்டும் , முதல் குற்றம் அந்த பெண்ணை பகீரங்கமாக அறைந்தது,உதைத்து,இரண்டாவதுக் குற்றம் பொது இடத்தில் அந்த அராஜகத்தை புரிந்தது,மூன்றாவது குற்றம் "நீ ஒரு கற்புள்ளவளா" என்று வீதியிலே ஒரு பெண்ணின் தன்மானத்தை அவமானப்படுதியது.இது நிச்சயமாக மறுப்பரிசீலனைக்கு கொண்டுவரவேண்டிய சமுதாய பிரச்சனையாகும்.இன்றைக்கு இந்தப் பெண்கள், நாளைக்கு!!!! ஏன்! உங்கள் வீட்டுப்பெண்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?

இவர்கள் ஆபத்தான புல்லுருவிகள்,,என் தாய் தமிழச்சியே!!!! உன்னிடம் கருணைக்கு நிகரான ரௌத்திரமும் உண்டு, மறந்துவிடாதே,இந்த துரியோதனாதிகளை விட்டுவைக்காதே...களை எடுக்கப் புறப்படு....நாங்கள் உன் பின்னால் நிற்கின்றோம்.வாழ்த்துக்கள்

அம்பிகையை வழிப்பட எளிய முறை மந்திரங்கள்

ஓம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியின் தாயே அம்பிகே போற்றி போற்றி
ஓம் ஹ்ரீம் க்லீம் அவ்வும் சௌவும் சரஹணபவ சயிலொளிபவ ஆறுமுகபவ ஆறுபடை உடையோனின் ஆனந்தத் தாயே போற்றி போற்றி
ஓம் நமசிவய ,யநமசிவ, வயநமசி, சிவயநம, மசிவயந எனும் மூலமந்திர மாணிக்கம் பரமசிவனின் பக்கம் அமர்ந்த அன்னையே போற்றி போற்றி
ஓம் நமோ நாராயணா என்ற அஷ்டாட்ச்ஷரத்தை அங்கமாகவுடைய அச்சுதனின் கூடப்பிறப்பே போற்றி போற்றி
ஓம் வங் யங் மங் நங் சிங் என்று ஓதுவார் தன்முன் இருந்து அருளும் ஆட்சி பொருளே அன்னையே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாங்கல்ய லஷ்மி மோஹினி சர்வ ரஷாம்பிகையே தாயே போற்றி போற்றி
ஓம் மங்களே மங்களதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா

Sunday, August 22, 2010

REALITY


The Easterners core theory of spirituality is reaching the true consciousness within, called SATH CHIT ANANDA, Sath means truth,Chit means consciousness and Ananda means bliss.This is the only ultimate aim for an aspirant to walk on the path of spiritual.


When the true searching starts within one self, he will indulge into him self, with the enquiry of who,what, and why ?why i am here?who am i?what is the purpose of this life?someone when to Bhagawan Buddha and asked him, who are you?Buddha was keeping silent, and he started asking him, are you a Sadhu?replied no, are you a Nyani?replied no, are you a human? replied no,than he got irritates and ask Buddha are you an animal?Buddha said no.He got annoyed and shouted at Bhagawan, than who the hell you are?


Bhagawan Buddha replied, I'm a total awareness, just mirroring each and everything....!!!!While In the process of inner searching the aspirant will find the master who had been in the path of Sadhana and attained the wisdom .Those are the great people called Sathguru.A dogma in this spiritual philosophy is "stop looking for the path and become the path"simply means, stop searching for the master while search for your self. In this persistant journey , one may find the right spiritual master and with his guidance, you may elevate to the higher dimensions .
"தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை....."
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே"
means know Thy Self....

We are aware of many things happening surrounding us.How many of us aware of ourselves?We are not human being with spiritual experiences but spiritual beings with human experience. How many of us aware of this ideal statement???Each human has created in such away, whereby he can creates whatever he wants or manifest, never to other living beings on the Earth.A precious Gold mining has left abandoned many-many births abroad.


Hey man! i understood what you are saying, but than where do i starts..?Do i need to look for the Guru,do i need to become a vegetarian,do i need to trivialize my surroundings or do i need to go to Himalayas?The only criteria which can lead to the ultimate truth is the utmost thirst of self enquiry.Without this thirst of self searching ,you may not find any purpose of the great masters in your live journey.Many of them are manipulating the royal ideal path of spiritual without knowing the real essence ."When the student is ready the master will appear" simple as it.......prepare our self towards the journey instead of searching for Guru's or wasting our time running behind them.Understand something, the real masters don't like the followers, because their existence on the earth merely to make you as an enlightenment beings so that you can light thousands and thousand for others.MANY out there are in the comfort zone of being followers instead of understanding the REALITY.


If he goes off, than we tend to look for the other person to comfort us.How long do we tentatively going to do this ?Its going to be an endless journey indeed, because we have already mesmerized by someone unconsciously and we lost our individuality and identity.So dependent will remain certain, when dependent dominates you, there you go!! very subliminal slavery thoughts starts acquiring within you and starts slashing you from the total independent or WISDOM.........Its occurred very subliminally to most of us without our consent,result???? we become the blind in the dark room with thousands and thousands uncertain thoughts and dilemma's forever.A life full of questions and unsettled business !!!!! Is this our reality???
Here to remind you again...A great awareness,peace,silent and bliss is hiding in you ,go back to you nature...BY NATURE ALL, ARE A BUDDHA, BUT WITH OUR IGNORANCE WE NURTURED OUR LIVES INTO MISSERIES..........!!!!! love all....

Thursday, August 19, 2010

வரும் முன் காப்பது அறிவு


வசதி இருக்கக் கூடியவர்கள் முடிந்தால் வாரம் இருமுறை வராட்டி,மருதாணி மரத்து விதை,வேப்பமரத்து காய்ந்த இலை சிறிது பச்சைக்கற்பூரம்
இவற்றுடன் மஞ்சள் பொடியைக் கலந்து வீடு முழுவதும் புகை போட்டால் காற்றில் பரவி வரும் நச்சுக்கிருமிகள் சாகும்.தற்பொழுது மனித இனத்தை பயமுறுத்திக்கொண்டிருக்கும் H1NI மற்றும் INFLUANZA A TYPE B TYBE இந்த தொல்லையிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.கைகண்ட அனுபவமுறையாகும்..உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

.

Sunday, August 15, 2010

உண்மை சகோதரனுக்கு உயிர் எழுதிய உரிமைக் காவியம்..

உயரத்திலோ குள்ளம், ஆனால் எதார்த்தத்தின் அகராதியில் இவனோர் சர்க்கரை வெல்லம்,
சிரித்தால் காண்பதுவோ இவனின் வெள்ளை உள்ளம்
பலரின் இதயமோ இவனுக்கு ஆனந்த இல்லம்....

தமிழ்பால் தாகம் கொண்டு, பல எதிர்ப்பால் உயர்வைக் கண்டவன்
தமிழ் வாழ, தமிழர் வாழ தன்னையே தமிழுக்கு தாரை வார்த்துக்கொண்டவன்
அந்தரங்கத்தில் இவன் எப்படியோ அரங்கத்திலும் அவன் அப்படியே,

பலர் வாழ, இவனின் நிழல் குடையாய் தாங்கியது ஒருப்புறம்
இவன் வாழ, பலரின் விரல்கள் விமர்சனங்களாய் இவனை
தீண்டி ரணப்படுத்தியது மறுப்புறம்...

தமிழனுக்கு உடன் பிறந்த பெருமைகள் பல இருப்பினும்,
தரணியிலே தொற்று நோயாய் ஒட்டிக்கொண்ட ஒன்று
"தானும் படுக்க மாட்டான் தரையையும் கொடுக்கமாட்டான்"
என்பதே தமிழனின் இடைக்காலச் சிறப்பு

இந்த உண்மைத்தமிழனின் அர்பணிப்பிற்கும் சேவைக்கும்,
அற்பத்தழிழனின் எத்தனை எத்தனை விமர்சனங்கள் !!!!!
இவன் வாய் ப்ரசங்கத்தின் வழி, எத்தனையோ ஏழைக்கு
வயிற்றுப்பசி தீர்ந்துக்கொண்டிருப்பதை யார் அறிவார்????

இதுக்கால் இவன் செய்த தொண்டு
தமிழ் தாய் மட்டுமே அறிவாள்,
மெய்பொருள் கண்டவன் இவன்,
ஒருப்போதும் கைப்பொருளை பற்றி இவனுக்கு இருந்ததில்லை கவலை...

ஓர் உண்மைத் தெரியுமா??எந்த ஒரு உண்மையாளனும்
நிகழ்காலத்து நிழலாகவே நிற்றிருப்பான்..அவன்
வாழும்காலத்தில் உலகம் அவனை அறிந்துக்கொண்டதில்லை
வரலாற்றின் கர்ப்பத்திலே இந்த உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன....

காலத்தின் கட்டாயம் நீ பேச வேண்டும் என்று,
உன் அடிச்சுவடு பற்றி வந்த, எனக்கோ ! பேசி சலித்துவிட்டது,
அப்பப்பா !! போதும்...போதும் !!!!!
இந்த பாவி தமிழர்களின் மேல் நீ வைத்திருக்கும் பற்றிற்கு
அளவில்லை என்பதை, உன் பதினைந்து வருடக்கால வரலாறு
பதிவு செய்துவைத்திருக்கின்றது..

உன் மேல் எனக்கு நீண்ட ஒரு நாள் வருத்தம் உண்டு,
நீயும் நானும் ஒரு சாதி என்பதை நீ நன்றாகவே அறிவாய்
ஆதம் நபியின் வழித்தோன்றல் நீயும் நானும்,
நீ முந்தி நான் பிந்தி.....


ம்ம்ம்ம்!!!! என்ன வருத்தம் என்று நீ நினைக்கலாம்
வருத்தமே நீதானப்பா !!!!!!
உன் உயிர் படும் வேதனையை நான் அறிவேன்
என் உயிர் படும் வேதனையை நீ மட்டுமே அறிவாய்

உனக்கு உன் சேவை முக்கியம்தான் சந்தேகமில்லை
ஆனால் அதை விட எனக்கு நீதான் முக்கியம்
காரணம் ஏன் தெரியுமா??? ஓர்க்கால் நான் முந்திக்கொண்டால்
உன் சகோதரனை முறையாக அடக்கம் செய்ய இங்கு யாருக்கும் தெரியாதப்பா!!!!
பயித்தியத்தின் உடலுக்கு ஒரு பயித்தியம்தான் வயித்தியம்
பார்க்க வேண்டும் என்பது சூஃபியின் சூத்திரமாகும்..


உடலுக்கான இடைவெளியில் தூரம் இருக்கலாம்
நம் உயிர்களுக்கான தூரம், ஒருப்போதும் இருந்ததில்லை
சகோதரனே உன் உடலை பார்த்துக்கொள், எனக்கு நீ வேண்டும்...
"ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்" இது பலரின் திட்டம்..

வாழி நின்றன் தமிழ் தொண்டு
ஆழிப்போல் வற்றாத புகழ் உண்டு
காதரே உன் சேவைக்கண்டு
காளி என்றும் துணை நிற்பாள் தன் வாள் கொண்டு...

secrets of Black Pepper....

Dear friends here are some tips on Black Pepper.This remedial was documented by Siddhar Teraiyar around 500 years ago.Many of us knows that pepper is a spices for our daily cooking purpose.Whereby our Theraiyar Siddhar profoundly stated in his "Theraiyar vaitiya surukkam" black pepper has a great medicinal value.
In Siddha philosophy we have this terms of word called (கற்பம்)KARPAM, means keeping the physical body in a right condition or balancing the five basic elements in its right proportion, in order to attain immortality or Jeevanmukthi {emancipation}.Therefor Siddhars has found many simple ways to keep the body in a right biological stage .Many of us failed to understand that our body is vehicle to carry our inner self to the ultimate goal but what happened here we merely indulged into this materialistic realm and find hard time to reach the sore indeed.
The Sodium (salt) level in our blood will slash the red cells called Hemoglobin,Hemoglobin contains of iron.The Hemoglobin mobilizing oxygen to all our parts of our body.If the blood contains to much of sodium the person tend to get BP and imbalance of HDL and LDL level or skin disorders like tumours and growths{ரத்தத்தில் பித்தம் கூடும் நிலை}
Siddhar THeraiyar Rhisi is giving a simple remedy to overcome this problem.Wash the black pepper and dry it and pound into fine powder form.The consuming method is, morning take a pinch of this powder add with a teaspoon of pure ghee and eat, while Evan can boiled this pepper and add brown sugar or Palm tree sugar and consume it.The duration are 96 days for better result.Another way also given by some siddha practitioner's,also a simple way of doing, early morning, before break fast, try to swallow 7 peaces of pepper and drink warm water.Gradually the person start seeing the level of immune will increase,solving indigestion disorder,the blood become purified and the cells system starts rejuvenates.

தேரையர் என்கின்ற சித்தர் அருளிய எளிய முறை வைத்திய ரகசியம்.






மிளகு ரகசியம்

. " மரிசமொவ் வொன்றாரு வார மட்டதிக
வரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமே
யுண்டிடு தேசுடனுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனெ
யுண்டிடத் தொனிதரும் மோதுபிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும் தொன்றையும்
குடி நீர் ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட்டோடுமே "

இந்த மிளகை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) முறையாக உண்டு வந்தால் உடல் கற்பமாகும் என்கின்ற வகையில் தேரையர் கூறுகின்றார்.இது நடைமுறையில் சாத்தியமா என்று ஆராய்ந்துப் பார்த்தால் உண்மைதான்.அடியேன் பல வருடங்களுக்கு முன்பதாக இதை ஒரு பெரியவர் மூலமாக அறிந்து செய்துப்பார்த்தேன் என் உடலிலேயே பல மாற்றங்கள் நிகழ்ந்தது.ஆனால் இதை பின்பற்றுவதற்கு சில விதிகள் உண்டு அதை முறையாக அனுசரித்தால் பலன் அபாரம்.
இந்த மிளகை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு நெய்யுடன் ஒரு சிட்டிகை அதாவது உங்களின் பெருவிரல் ஆள்காட்டி விரல் இவற்றால் எடுத்தால் சிட்டிகை எனப்படும் இது சித்த மருத்துவ அளவு வகைகளில் ஒன்றாகும்.இப்படி காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் கரகரப்பு, சளி தொல்லைகள் மறைந்து குரலில் இனிமை உண்டாகும்.
இதை பனக்கற்கண்டு அல்லது வெல்லம் இவைகளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்களான தலைவலி,நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,தோல் நோய்கள் இவைகள் சரியாகும்.பொதுவாக மிளகைக் குடி நீராக காய்ச்சிப் பருகி வந்தால் ரத்தம் சுத்தியாகும்,த்ரிதோசங்கள் நீங்கும் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கூடும், ஆரோக்கியமான வாழ்க்கை உண்டாகும்.

சித்தர்கள் வாக்கு பொய்ப்பதில்லை.செய்து பலன் காணுங்கள்.....
{ரகசியங்கள் தொடரும் }

Friday, August 13, 2010

பாவம் அவள்


புத்தருக்கும் ஏசு முகமதுவுக்கும் உதித்தது உண்மையின் தத்துவம் இங்கே..
விலங்குக்கும் ஓரறிவு முல்லைக்கும் கருணைக்காட்டியவனும் இங்கே

அப்பாவி மனிதர்களை கொன்றுக்குவித்து, மரண ஓலத்தை சங்கீதமாக ரசித்த,
ஹிட்லரும் அவன் பார்ட்னர் இடியமீன், இவன் வழித்தோன்றல் ச்சீ.. ச்சீ.. ச்சீ... சிங்களவனும் இங்கே...


பரந்த பூமித்தாயின் மார்பகத்தை கூறுப்போட்டு - இந்தப்
பாகம் என்னுடையது அந்தப்பாகம் உன்னுடையது என்று
கோடுகளை கீறி,
உன் நாடு என் நாடு என்று -அவளை
அவலப்படுத்தும் அவமானச்சின்னங்களாய்,
ஆறறிவுப் படைத்த மனித மிருகங்கள் தோன்றுவதும் இங்கே....

அப்பாவி பூமித்தாயின் கருவினிலே இப்படியும் சில
ஈனக்கரு...பாவம் நீ சுமப்பவள் தானே !!!!
உன் கணவனையாவதுக் காட்டு பூமி மாதா.....!!!! அவனிடமாவது முறையிட்டுப்பார்க்கின்றேன்,
இனியாவது, புதியதோர் மனித குலத்திற்கு வித்திடுவாயா என்று !!!!!!!

கலவியில் பிறந்து, கேள்விகளில் வாழுகின்றோம்.....!!!!

உடல் எடுத்தக் காரணமும் தெரியாது - இதற்குள்
உயிர் வந்த சூட்சமமும் தெரியாது -_ இறுதியில்
ஊரெல்லாம் கூடி அழும் வேதனையும் புரியாது....
ஏனிந்தப் பிறவி?? ஏனிந்தப் பிறவி??


புதிதல்ல இந்த பூமி , புதியவர்களும் நாமல்ல இங்கு- இருந்தும்
புதிரோடு புலம்புகின்றோம்..புரியாமல் வாழுகின்றோம்,

வாழ வந்த வையகத்தில் வழி தெரியாத ஒரு பயணம்,
இருக்கும் உலகமோ ஒன்று, காணும் பாதைகளோ கோடி - இதில்
என் பாதங்களின் சொந்தப் பாதை எந்தப்பாதை???

Thursday, April 29, 2010

Amazing of our Thirukkural


THIRUKKURAL has revealed the Law of Attraction 2000 years back.
"Whatever people desires,they get as desired if only they have firmness of mind."
"Men of resolute mind will surely achieve whatever they wish for."
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணிய திண்ணியராகப் பெரின்...{666} வினைத்திட்பம்The Law of Attraction formula was stated in chapter 67 "firmness in action" Thirukkural { Holy Scripture of Tamilians} by Saint Valluva Naayanaar approximately 2000 years back.

Human thoughts are very basically produces Bio-Electro magnetic charges from the day he started to breath.These charges are spreading out through three hundred millions of pores from human body.Whatever we thinks from our cognitive level are triggering our brain and passing through medulla oblongata (back brain)from here it drives to sympathetic and parasympathetic autonomic nervous systems and merges in our blood as a vibes .Blood has the potential of storing energy and reacting towards the thought patterns....

Why???Any water elements are very sensitive towards human Biomagnetism... for an example in Church they will offer holy water,in the Mosque the Moulana or Imam chants the water for some mystical purpose like healing and so on and Zam-Zam water in Mecca is very holy for a Muslim , whereas in Hindu religion many of them believes in taking bath at Holy Ganges and you will find in most of the temples the priest will offer holy water called "THEERTHAM".

Recent research was done by a professor in Japan and the end of his conclusion showed that water element can react towards human thoughts and feelings .He further more explained, any constructive thought patterns or feelings are structurally forming a Geometrical design in to the molecules of H20.This research and the theory was proclaimed as a Water Therapy through out the world by this professor.

Well ! scientifically the research has proved that water can react towards human thoughts .The proportion of a water element in human body is about 70% which is blood and brain.The truth behind all the religion which dwelling with water is purely science, whereby the divine energy are transmitting into the water for some divine mystical purpose . Now if any water elements can react towards human thoughts..aren't blood?

Certainly yes ,blood is reacting and stimulating too, by our thoughts !At this process the blood is manifesting waves from our body each and every moment .Ever cross this quotation?.. "We Are The Architect Of Our Own Life".So human are the master designer of their own life pattern by creating negative and positive thought waves.This was a Amazing scientific insight was discoverd by Saint Thiruvalluvar naayanar...many more..!!!!!

Thursday, April 22, 2010

சும்மா இருப்பது சுகம்!!!!!

தியானம் செய்வது எப்படி, தியானம் செய்வது எப்படி என்று நிறையப்பேர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.தியானம் செய்வது எப்படி என்று கேட்பதை விட சும்மா இருப்பது எப்படி என்று அறிந்துக்கொள்வது சிறப்பு.தியானம் என்பது தானாகவே நடக்ககூடியது.சும்மா இருக்கத் தெரிந்தால்தான் தியானம் முழுமையாக சித்தியாகும்.

சும்மா இருப்பது எப்படி?முருகக்கடவுள் அருணகிரியாருக்கு உபதேசித்ததுவும் இதுவே,"சும்மா இரு சொல்லற",தாயுமான ஸ்வாமிகளும் இதை "சும்மா இருக்கும் திறம் அரிது" என்கிறார்.நன்றாக கவனியுங்கள் மனித மனம் எப்போதும் கடந்தக்காலம் அல்லது எதிர்காலத்தில்தான் இருக்கும்,நிகழ்காலத்தில் நிற்பது என்பது இயலாத காரியமாகும் இந்த மனத்திற்கு.

எப்பொழுது மனம் நிகழ்காலத்தில் நிற்க தொடங்குகின்றதோ,அதன் சக்தியானது மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.நாம் எதையாவது செய்யும் பொழுது நம் சக்தி விரயமாகி வெளி செல்லத்தொடங்கும் செய்கை எல்லாம் சக்தியை வெளிபடுத்தும்.செயலை கடந்த போது சக்தி உள்ளே கடந்துச்செல்ல தயாராகும் .இந்த உள்பயணம் தொடங்கிவிட்டால் வெளிப்பயணமாகிய மரணத்தின் வாசல் மூடப்பட்டுவிடும்....எப்படி வசதி????வாழ்த்துக்கள்!!!!!!!

சும்மா இருப்பது சுகம்!!!!!

Wednesday, April 7, 2010

சகாப்தம்

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அகவை எழுபது. ஒரு சாகப்தம் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்று நினைக்கும் பொழுது "என்னப்புண்ணியம் செய்தனை நெஞ்சமே.." என்கின்ற
வரிகள்தான் சாலப்பொருந்துகின்றது..

யார் இவர்?

சாக்தஸ்ரீ,காடாரப்பேரறிஞர்,சித்தர்குலபதி டாக்டர்.சி.ஜெயபாரதி தான் இத்துணை பெருமைகளுக்கும் உரியவர்.நல்லதோர் விளைச்சல் கரும்பை எங்கே சுவைத்தாலும் தித்திப்பதுப்போல்,இவரின் தன்மையும் அத்தகையதே.
பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி வானசாஸ்திரம்,
சிற்பக்கலை,வர்மக்கலை,மந்திர சாஸ்திரம்,ஓலைசுவடிகள் ஆய்வு,கல்வெட்டாய்வு,தொல்பொருளாய்வு என்று அடேய்யப்பா இன்னும் எத்தனை-எத்தனையோ கலைகள் இவருக்குள் சங்கமம் ஆகியுள்ளது என்று நினைக்கும் பொழுது இது பிறப்பல்ல சிருஷ்டி என்றே சிந்திக்கத்தோன்றுகிறது!!!
இவர் தமிழ் நாட்டில், மதுரையம் பதியில் தனது மருத்துவக்கல்வியை மேற்கொண்டிருக்கும் பொழுது அன்று மதுரை ஆதீனப் பொருப்பில் இருந்த ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் அவர்களின் நட்பு கிட்டியது.இந்த ஸ்வாமிகள்தான் பல வருடங்களுக்கு முன்பு "ஆவிகளுடன் பேசுவது எப்படி" என்கின்ற சிறு நூலை அச்சிட்டு வெளியிட்டிருந்தார்கள்........{தொடரும்}

நிழல்களும் நிஜங்களும்!!

ஈற்றெடுத்த தாய் விடைப்பெறுவாள் ஓர் நாள்,
இணையில்லாத் தகப்பன் விடைப்பெறுவான் ஓர் நாள்,
உடன் பிறந்த உதிர பந்தங்கள் விடைப்பெறும் ஓர் நாள்,
உண்மையற்ற ஊர் உறவுகள் விடைப்பெறும் ஓர் நாள்,
காதலிக்கும் கன்னியரும் விடைப்பெறுவாள் ஓர் நாள்,
காலத்தால் நன்றிமறவா உயிர் நண்பர்களும் விடைப்பெறுவார்
ஓர் நாள்.....

இன்னுமோர் அதிசயம் கேள் ???!!!!!

இதுவரை நான் சுமந்த இந்த உடற்பையும்
விடைப்பெற போகின்றது ஓர் நாள்,
நிலையில்லா வாழ்க்கையிலே
நிரந்தரமானதெது ? நித்தியமானதெது?
நிழல்கள்தான் நித்தியமென்றால்
நிஜங்களே நீங்கள் எங்கே?????

சிப்பிக்கூட குருவாகும்!!!!!!!

அந்தி மாலைப் பொழுது....

கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தன என் கால்கள்,
காண நேரிட்டது இந்த பிரபஞ்ச வீதியில்,
இப்படியும் ஒரு உன்னத கலவையை .
கைகளிலே எடுத்துப்பார்த்தேன், உயிரை கடலில்
தொலைத்து விட்டு,உடலை கரைக்கு சொந்தமாக்கிக்கொண்ட
சிப்பிகளின் சிதறல்களை,
அடேயப்பா ! எத்தனை-எத்தனை வகை சிப்பிகள்,
அத்தனையிலும் அந்த ஆதி சிற்பியின் மாயஜால
வினோதங்கள்..

உணர்த்தப்பட்டது ஓர் உண்மை!!!

ஓர் அறிவை மட்டும் உரிமையாக்கிக் கொண்ட சிப்பி,
உயிர் பிரிந்தும் ரசிக்க தக்க நிலையில் உயர்ந்திருக்கின்றது,
ஓர் அறிவு ஜீவிக்கு இத்தனை ஈர்ப்பு இருக்குமென்றால்
ஆறறிவு ஜீவிக்கு எத்துனை ஈர்ப்பு இருக்க வேண்டும்? !!!

ஆனால்!! நான் இறந்த பிறகு, இந்த சிப்பியை போல்
இரசனைக்கு உரியவனா அல்லது
நாழிகையோடு எடுத்து விடுங்கள் நாறிவிடும் என்ற
வேதனைக்கு உரியவனா?????
{போர்டிக்சன் கடற்கரை 20/8/08}

Monday, April 5, 2010

புதுவருட தகவல்கள்

பிறக்கப்போகும் புது வருடத்தின் பெயர் விகிர்தி. 14-04-2010 புதன் கிழமை காலை 9.27 க்கு ரேவதி நட்சத்திரத்தில் வருடம் பிறக்கின்றது.முன் இரவே இந்த பொருட்களை எல்லாம் நீரில் கலந்துக்கொள்ளவும் துளசி,வேப்பிலை,மஞ்சள் பொடி,கல் உப்பு,பச்சைக்கற்பூரம்,வில்வஇலை,கோமயம்,இளநீர்.பிறகு மறுநாள் காலை உடம்பில் பச்சை வர்ணத்தில் ஏதேனும் ஆடை அல்லது துண்டு அணிந்துக்கொண்டு குளிக்கவும்.குளிக்கும் பொழுது புதன் பகவானையும் விஷ்ணு பகவானையும் மனதில் நினத்துக்கொள்ளவும்.கண்டிப்பாக அன்று பச்சைபயிறு தானியத்தை புறாக்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட இந்த மந்திரத்தை 27 முறை ஜபம் செய்து பின் தாய் தகப்பனை வணங்கி,ஆலயம் சென்று மாஹகணபதி பெருமானுக்கு வழிப்பாடுகள் செய்யவும்.

1} ஒம் மம் ஹரி ஹும் சிவ புத தேவாய நமஹ

2} ஒம் நமோபகவதே வாசுதேவாய..

குறிப்பு:-அன்றைய தினம் முடிந்த அளவு ஏழை எளியவர்களுக்கு
ஏதேனும் தானங்கள் செய்யவும்.மிகவும் நன்மை
உண்டாகும்.