You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Thursday, December 30, 2010

கவலையை விடுங்கள் கந்தவேற்பெருமான் வழிக்காட்டுகின்றான்




“சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயும்நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே” {கந்தர் அனுபூதி}
முருகா !!!! நான் சிறியவன், வழியறியேன், எமன் என்னை கைபற்றும்முன் நீ என் கரம் பற்றி உன் திருவடிகளிலே என்னை சேர்த்துக்கொள்,இந்த ஏழைக்கும் சிவஞானயோகத்தை உபதேசம் செய் என்று உயர்ந்த உயிர் பிச்சையை நமக்காக வேண்டுகின்றார் ஆசான்.அருண்கிரியார்.
புராண வரலாறு ஈசனின் நெற்றிக்கண்ணில் கந்தன் உதித்ததாக கூறுகின்றது,ஆணும் பெண்ணும் ஸ்பரிசமாகமல் தோன்றியவன் முருக்கடவுள்..யோக மார்க்கத்தில் தன் ஜீவசத்தாகிய விந்தை கட்டியவர்களுக்கு சுவாசம் மேல்கதியாக ஊர்த்துவகதி ஏற தொடங்கும் அப்பொழுது சுழுமுனைவாசல் என்கின்ற நெற்றிக்கண் திறக்கும் இதற்கு லலாட சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு.மீண்டும் புராணத்திற்கு வருவோம், சிவப்பரம்பொருள் ஒரு தருணம் காமனை எரித்ததாக ஒரு செய்திவரும்.இதன் சூக்குமம், ஒரு காலத்திற்கு பிறகு, காமத்தீயை யோகத்தீயாக மாற்றினால் ஞான வாசல் திறக்கும் என்பது ரகசியமாகும்.
இந்த இடம் கந்தப்புராணத்தின் ஒரு உச்சம்......கைலாயங்கிரிநாதனை தரிசிக்க வேண்டி ப்ரம்மதேவர் கைலைக்கு செல்கின்றார், அப்பொழுது அங்கு வீரபாகு தேவர்களுடன் முருகப்பெருமான் வழியில் அமர்ந்திருக்கின்றார். முருகப்பெருமான் ப்ரம்மாவைப்பார்த்து ஸ்வாமி வணக்கம் என்கின்றார் அதற்கு ப்ரம்மா கண்டும் காணாதவர் போலே தொடர்ந்து கைலையை நோக்கி நடக்கின்றார்.இந்த செய்கை முருகப்பெருமானுக்கு அதிசயத்தை உண்டு பண்ணியது.சிலகாலம் பொறுத்து ப்ரம்மா மீண்டும் அந்த வழியை கடக்கின்றார் பரமேஸ்வரனை தரிசனம் செய்துவிட்டு.
முருக்கடவுள் மீண்டும் வணக்கம் ஸ்வாமி என்கின்றார் அப்பொழுதும் ப்ரம்மா தலையை மட்டும் அசைத்துவிட்டு இருமாப்புடன் தன் நடையை தொடர்கின்றார்.அக்கினியில் பிறந்தவன் ஆயிற்றெ ஆறுமுகப்பெருமான்,வந்ததே கோபம்......
முருகப்பெருமான் :- ஸ்வாமி சற்று நில்லுங்கள்,யார் நீங்கள்
ப்ரம்மா :- என்ன வேடிக்கையாக இருக்கின்றது என்னையா யார்
என்று கேட்கின்றாய்?
ப்ரம்மா :- நாம் படைத்தல் தொழில் புரியும் கடவுள்
முருகப்பெருமான் :- அப்படியா சரி ,அப்படி என்றல் உங்களின் தகுதிதான்
{qualification} என்ன?
ப்ரம்மா :- நாம் சகல வேதசாஸ்திரங்களையும்
கற்றுத்தேறியுள்ளோம்
முருகப்பெருமான் :- ஓ!! ஆகட்டும், அப்படி என்றால் படைப்பிற்கு மூலம்
எது ?
ப்ரம்மா :- படைப்பிற்கு மூலம் ஓங்காரம், ஓங்காரத்தை வைத்தே
அனைத்தையும் படைக்கின்றேன்
முருகப்பெருமான் :- அப்படி என்றால் ஓம்காரத்திற்கு அர்த்தம் கூறும்...
{ இதில் ஒரு வேடிக்கை உள்ளது, ஓம்காரமே ஓங்காரத்திற்கு அர்த்தம் கேட்கின்றது }
ப்ரம்மா விழிக்கின்றார், முருகன் ப்ரம்மாவை சிறைவைகின்றார்.
படைத்தல் தொழில் ஸ்தம்பித்து விடுமோ என்று தேவர்கள் அஞ்சி சிவப்பெருமானிடம் முறையிடுகின்றார்கள்.கைலாயநாதன் முருகனை நோக்கி வருகின்றார்.
ஈசன் :- அப்பா ! ஏன் நான்முகனை சிறைவைத்தாய் ?
கந்தக்கடவுள் :- அவன் தொழில் தகுதியில்லாமல் படைப்புத்தொழிலை
ஆற்றுகின்றான் ஆகையால்தான் அவனை சிறைவைத்தேன்
தந்தையே, மேலும் தொடர்கின்றார்.. அப்பா நீரில் குளிக்கும்
முன்பு உடலில் அழுக்கிருக்கலாம் ஆனால் குளித்தப்பின்பும்
அழுக்கு இருக்கின்றதென்றால் அந்த நீரை
அவமதிப்பதாக தானே அர்த்தம் அதுப்போல
இறைவனாகிய உன்னை பார்ப்பதற்கு முன் ஆணவம்
இருக்கலாம் ஆனால் உன்னை வழிப்பட்டு
தொழுதப்பிறகு ஆணவம் அஹங்காரம் எல்லாம்
அழிந்திருக்க வேண்டுமே அதுத்தானே வழிப்பாட்டின்
அடிப்படை உண்மை ஆனால் இறைவனாகிய உங்களைப்
பார்த்தப்பிறகும் தனக்கு ஆணவம் தலைகணத்து நின்றதே
அதன் காரணமாகத்தான் நாம் அவரை சிறைவைத்தோம்
தந்தையே........ என்றார் தகப்பன்சாமி !!!

ஈசன் அப்பா ஏன் நான்முகனை சிறைவைத்தாய்
கந்தக்கடவுள் அவன் தொழில் தகுதியில்லாமல் படைப்புத்தொழிலை
ஆற்றுகின்றான் ஆகையால்தான் அவனை சிறைவைத்தேன்
தந்தையே, மேலும் தொடர்கின்றார்.. அப்பா நீரில் குளிக்கும்
முன்பு உடலில் அழுக்கிருக்கலாம் ஆனால் குளித்தப்பின்பும்
அழுக்கு இருக்கின்றதென்றால் அந்த நீரை
அவமதிப்பதாக தானே அர்த்தம் அதுப்போல
இறைவனாகிய உன்னை பார்ப்பதற்கு முன் ஆணவம்
இருக்கலாம் ஆனால் உன்னை வழிப்பட்டு
தொழுதப்பிறகு ஆணவம் அஹங்காரம் எல்லாம்
அழிந்திருக்க வேண்டுமே அதுத்தானே வழிப்பாட்டின்
அடிப்படை உண்மை ஆனால் இறைவனாகிய உங்களைப்
பார்த்தப்பிறகும் தனக்கு ஆணவம் தலைகணத்து நின்றதே
அதன் காரணமாகத்தான் நாம் அவரை சிறைவைத்தோம்
தந்தையே........ என்றார் தகப்பன்சாமி
இன்று வழிப்பாட்டின் நிலை நாட்டாமைக்கும் தலைவர்களுக்கும் இறைவன் காக்க வேண்டிய அவலம், நல்ல வேலை முருகப்பெருமான் தற்பொழுதும் தன் சுட்டிதனத்தை தொடர்ந்திருந்தால் பல தலைவர்கள்
சிறைசாலைகளில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.
இப்படியாக பல உண்மைகள் முருக வழிப்பாட்டில் பொதிந்துள்ளது
முருகனின் பெயரிலேயே அத்துனை ரகசியம் அமைந்துள்ளது, முருகு
{மு} மெல்லினம் ரு இடையினம் கு வல்லினம் தமிழ் த வல்லினம் மி மெல்லினம் ழ் இடையினம், இது முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள உயிர் பந்தமாகும் மேலும் முருகா என்பதை கடை எழுத்து
மாற்றினால் காமுரு என்று வரும்..இதை காமுரு..காமுரு..காமுரு என்று தொடர்ந்தால் போல் கூறினால் முருக முருக முருக என்று ஒலிக்கும்.காமுருதல் ஆசைபடுதல் என்று அர்த்தம் கொள்ளலாம்..திருமூலப்பெருமான் கூறுவதுப்போல் “ஆசை விட விட ஆனந்தமாமே.....”ஒரு விந்தைப் பாருங்கள், பழனி முருகன் ஆண்டிக்கோலம் உடையவன், எதுவுமே வேண்டாம் என்று சென்றவன் ,ஆனால் அவனை நாடித்தான் கோடிக் கோடியாக சொத்து குவிகின்றது..எதுவும் வேண்டாமென்றால் எல்லாம் வரும் சூத்திரத்தை அறிந்தவன் அவன் ஒருவனே..அதுமட்டுமல்ல அவனை
உளமாற உயிராக வழிப்படுபவர்களுக்கும் அவன் அந்த சூக்குமத்தை உணர்த்துகின்றான்..அகத்திய பெருமான் தொடங்கி 1940 களில் வாழ்ந்த தவராஜசிங்கம் சித்தயோகி சிவானந்த பரமஹம்சர் அதன் பின் வாரியார் ஸ்வாமிகள் வரையிலும் அந்த சூத்திரத்தை அறிந்தவர்களாவார்கள்.
அகத்தியருக்கு தன்னையே தமிழாக்கிக் தந்தவன்,அருணகிரிக்கு வாய்மணக்கும் சந்தத்தமிழை கொடுத்தவன்,குமரகுபரருக்கு பிள்ளைத்தமிழாய் கந்தர்கலிவெண்பாவை பாடவைத்தவன்,தேவராயா ஸ்வாமிகளுக்கு நாளும் காக்கும் சஷ்டிகவசத்தை அருளியவன்,இந்தக்காலக்கட்டத்தில் ஏதாகிலும் அற்புதம் நடைபெற்றுள்ளதா என்று கேட்கின்றீர்களா? சத்தியமாக உண்டு,
இம்மலை திருநாட்டில் இலைமறை காயாய் வாழ்ந்துவரும் மூத்தத் தமிழறிஞர் ஆன்மீக சித்தாந்த சாகரம், சாக்தஸ்ரீ. டாக்டர்.சி.ஜெயபாரதி அவர்கள் முருக வழிபாட்டில் பல அனுபவங்களையும் அற்புதங்களையும் கண்டவர்கள்.ஆயக்கலைகள் 64ல் ஏறக்குறைய 30 கலை நுட்பங்களை முருகப்பெருமானின் அருளால் கிடைக்கப்பெற்றவர்.அடியேன் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஓர் உண்மைத் சன்னியாசி {சர்வ நாசம் சன்னியாசம் ஆனால் இன்று சன்னியாசிகள் தான் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கிகிடக்கின்றார்கள் இது கலியுக கன்றாவி போலும்} அவர் குண்டலினி யோகியும் கூட ஆவார் 50களில் கதிற்காமம் செல்ல வழித்தடுமாறியப்போது வயதான கிழவனாக தோன்றி பாதை காட்டி மறைந்த அற்புதம்,இப்படி பல பல உண்டு..
வரும் தைபூச நன்னாளிள் கந்தவேள் பெருமானை நினைந்துருகி ஆர்பாட்டாமில்லாமல் ஆடம்பரமில்லாமல் உண்மைசரணாகதியுடன் அவனை நினைந்து கண்ணீர் விட்டு அழைத்துப்பாருங்கள் வேலும் மயிலும் உடன் வருவதை உண்மையாய் உணர்வீர்கள்...
.
உபதேசம் பெறவோ அல்லது ஞானதீக்கை பெறவோ இரண்டு ஒளி நாட்களை திருமூலப்பெருமான் தம் திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார் ஒன்று தைபூசம் மற்றொன்று வைகாசி விசாகம் ஆகையால் வருகின்ற தைபூச நாளன்று முருகனின் சன்னிதானத்திலோ அல்லது தாயின் ஆசியுடனோ கீழ்கண்ட மந்திரத்தை ஜபிக்க தொடங்குங்கள் செந்திற்பெருமான் எமன் வரும் வேளை சக்திவேல்கொண்டு உடன் வந்து அணைப்பது உறுதி ..
ஓம் ஐம் ரீம் வேல் காக்க காக்க இது பாம்பன் சுவாமிகள் அருளிய அதி அற்புதம் வாய்ந்த கவச மந்திரமாகும்
சிவனும் இவனும் ஒன்று-உயர்
சிந்தை செய்பவர் தமக்குள்
ஆனந்தமாய் ஒளிர்{வான்}- உயிர்
உச்சிவெளி தனக்குள் நின்று

Saturday, December 25, 2010

Om Gam Ganapathaye Namaha



ARUGAMPULL {Botanical name :-CYNODON DACTYLON}
When we say Arugampull our mind immediately will goes Lord Ganesha.Once a upon a time there was asura called Analasuran and given so much of adversities to Deva's.In many ways they attempted failures to overcome his tortures,finally Devas seek ed help from MahaGanapathy.The battled war started and Analasura was equally strong as Mahaganapathy and the final encounter lord Ganesha made his body tremendously huge and swallowed Analasura.The meaning of Analasura is Anal means flame so once Lord Ganesha swallowed him his body has become extremely heaty and he was suffered from the inner heat.As per Brammas advise all the Deva's started performing maha abhisegam
with a green grass called Arugam....finally the effects of the extreme heat was reduced and disappeared.Now moral of the story any kind of heat which the body is stimulating can be reduced by this grass.According to puranas Arugampull is the first grass which grounded in our mother earth.

What are the common disease can be cured by Arugampull :-
Balancing our immune system,
function as blood purifier,controls BP,reduces brain heat,clears white discharge (ladies),helping to cure skin disorders,controls beginning stage of cancer,heals urinary infections.

How to use :- for daily use we can consume 2 capsules morning and evening before food.This is for general health and metabolism.For serious diseases the usage will be slightly different whereby 90ml of juice morning,afternoon and evening before food at lease for 90 days.One may follow vegetarian diet during the 90 days period will see a excellent result.Those who have eczema,itchiness or rashes a handful of Arugampull,a small piece of fresh turmeric one number of lime fruit juice,blend all to gather and apply all over the body or on the effected areas,leave for 30 minutes and take warm bath, for good result twice a week for 3 months.Evan dry grass can be use as a head resting mat while sleeping, good for the brain and nerves.See you with another herb soon....May God Bless...

Wednesday, December 15, 2010

ஆனந்த தாண்டவம்



சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாளும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்
சிவ சிவ என்ன சிவகதித் தானே {திருமந்திரம்}

சிவ சிவ என்கின்ற நாமத்தை சதா ஜெபம் செய்துக்கொண்டிருந்தால்
வினைகள் அழியும் என்கின்றது திருமந்திரம்..வரும் 22ம் தேதி காலை ஏறக்குறைய 3.15 தொடங்கி 5.00 மணி வரை நம் பூமியில் ஒரு
மிக விஷேஸமான ஒரு நிகழ்வு நடக்க உள்ளது அதை நம் முன்னேர்கள் சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் என்கின்றார்கள் அல்லது ஆதிரை திருநாள் அல்லது ஆருத்ரா தர்சனம் என்றும் அழைப்பார்கள்.தமிழ் நாட்டில் சிதம்பரமாகிய ஆகாச பூத ஸ்தலத்தில் இந்த நிகழ்வு வருடாவருடம் நடைப்பெருகின்றது.விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால் இன்றைய தினம் நம் வானவெளியில் திருவாதிரை நட்சத்திர மண்டல விண்மீகள்,பூமி மற்றும் நிலவு ஒரு கோட்டில் தன் சஞ்சாரத்தின் போது நிற்கும்,இது வடகிழக்கு திசையில்
நிகழும்..புராண ரீதியாக பார்த்தால் வடகிழக்கு திசையில்தான் சத்தியலோகம் இருப்பதாக கூறுகின்றார்கள்.அன்று மிக அதீதமான அருட்காந்த சக்தி நமது பூமியை நோக்கி வரதொடங்குகின்றது,அன்றைய தினம் நாம் தியானம் மற்றும் மந்திர ஜபங்களை செய்ய ஆரம்பித்தல் நமது முன் வினைகள் நீங்கும் என்று சித்தர்பெருமக்கள் கூறுகின்றார்கள்...மேலே இருக்கும் படம் நமது வானவெளியில் அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பாகும்..சற்று ஆழமாக அதை உள்னோக்கிப்பார்த்தால் சிவப்பெருமானின் ஆனந்த தாண்டவ அமைப்பை காணமுடியும் இது நாசா விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்ட படமாகும்....இன்னும் நிறைய உண்டு பிறகு ஒரு நாள் விரிவாகப் பார்ப்போம்....

Tuesday, December 14, 2010

COSMIC DANCE (Arudra Darshan)




COSMIC DANCE OF LORD SHIVA
(ANANDA THANDAVAM)
A science of Arudra festival
ARUDTRA DARSANAM (Athirai thirunaal) which is falling on 21st night 22nd early morning at 4am of December 2010..The purpose of human life on the earth according to Eastern methodology is back to state of Nature means elevate to the higher consciousness of eternal bliss (SAT CHIT ANANDA).To elevate towards this consciousness, one must be able to connect himself with the higher consciousness, without dropping our karma and samskaras its impossible to attain this stage....
A thought is leading to an action and an action is producing a reaction (law of-cause and effect) those reaction is forming a strong imprint in the ether (Akash) and in our subconscious (chittam) as well. The cycle continuously repeating in many births as we know. If the mind is keep on repeating the same phenomena means it has already been programmed very deeply in our subconscious stage..The way to get rid of this unwanted subconscious routine one must have a strong mental awareness call athma Viccharana simple means the balance between mind and intellects (Manas & Arivu).
There are some events are occurring in our cosmic due to the positions of constellation's and planets in our galaxy .One of the event called ARUDRA DARSAN..In Hindu astrology we have 27 nakchatiras (constellation)Aswini-Revaty,among this 27 constellation THIRUVATIRAI (ORION )nakchatira is the biggest and bright full star and its belongs to Lord Siva..
On Arudra day Orion star groups is forming a design in our sky and it’s similarly looks like the dance of lord Nataraja(see the pictures below).This will appear in South-East (ESAANYA THISAI) direction on our galaxy. During on that night our Moon, Earth and Orion star groups will be in a straight vertical line in their position. As I said the occurring of this phenomenal event on the sky producing a strong DIVINEMAGANATIC RADIATIONS from South-East direction which our Satyaloka located according to our Puranas or spiritual location of higher celestial beings...
During this period, performing poojas,meditation or mantra chantings will gives a tremendous spiritual and mental strength.Scientifically ORION group of stars very much contained of Sodium,Magnisium and Iron which needed in our body .Magnisium and Iron is important to form the blood cells.On this day the rays from those combination will directly effect on our body and brain therefor our anssestors discovered performing any spiritual or metapsychic rituals will demolish our past life blueprint in our subconscious leval.

Thursday, December 9, 2010

பெண்கள் 4 வகை



Ancient Hindu Tantric Texts have classified women in four distinct categories or types, depending upon the most distinct or differentiating inborn traits commonly found in women


Padmini or Lotus- woman- This type of woman is soft, tender and beautiful and has a soft smooth and flawless complexion. She wears expensive clothes and jewellery.

Chatrini or Art- woman –She is of medium built, lean and has an artistic temperament. She is found of pleasure and all those things which are artistic in nature.

Shankhini or Conch-woman –She is well built and has a fiery temperament. She can be rude and heartless. She is a passionate and domineering woman, prone to sudden bursts of passion.

Hastini.or Elephant woman – She is thick limbed and has no prejudices, is easy to please and requires a lot of sexual activity to please her. She can be coarse and rough.

Wednesday, December 8, 2010

திடமான சங்கல்பத்தின் ஆற்றல்


மகான்களாக சிலர் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். அறிவுத்திறனும், அன்பும் நிறைந்தவர்கள் கிடைப்பது சற்று கடினம் என வரலாறு சொல்லுகிறது. நம்முடைய காலக் கட்டத்திலேயே வாழ்ந்து மரித்தவர் வேதாத்திரி. மகரிசி வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்களை படிக்க நேர்ந்தது. அதல் பகிர வேண்டும் என்று தோன்றியதை இங்கு பதிக்கிறேன்

“ஒருநாள் ஒரு நண்பர் மகரிசி ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.

“அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிசி.

“முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டிகழித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”

“நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே!.பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “

“நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”

“உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”

“ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”

“உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்

நீங்கள் நல்லவிதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”

இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டேன்.வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வழுப்பெற்றவுடன் இந்த தவறை விட்டுவிடுவீர்கள். என்று கூறினார்.

ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெரும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குருதட்சனையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.
“இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.

உடனே மகரிசி “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.

அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.

மகான்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழிவகை செய்பவர்கள். அதைதான் மகரிசியும் செய்துள்ளார்