You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Saturday, July 16, 2011

வழி உண்டு வாசலும் உண்டு.... மனம் உண்டா??


விதி அல்லது வினை என்பது உண்மையானால் அதை ஜெயிக்க முடியும் என்பதும் மிகப்பெரிய உண்மையாகும்.அதை வகுத்தவனே நீதானே ! உன்னுடைய எண்ணங்கள்தான் வினையாக செயல் வடிவம் எடுக்கின்றன என்று நீ முதலில் தெரிந்துக்கொள்.பாரம்பர்யமாக கையாண்டு வரும் குடும்ப நம்பிக்கைகள் எண்ணங்களாக கொள்கைகளாக மாறி பின் செயல்களாக வடிவெடுக்கின்றன.செயல்கள் நிகழும் பொழுது அது நம் பிரபஞ்சத்தில் ஓர் அழுத்தமான படிவத்தை ஏற்படுத்துகின்றது.அதே நேரத்தில் நமது சித்தம் என்று சொல்லும் மனதின் மிக சூக்கும நிலையிலும் பதிவை வைத்துக்கொள்கின்றது இதை இன்றைய விஞ்ஞானிகள் SOUL GENETIC என்று கூறுகின்றார்கள்.
பலப்பிறவிகளின் தொடர் எண்ணங்கள்தான் நாம் இப்போது வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்க்கையாகும். அதைத்தான் நாம் விதி என்கின்றோம் ஆகவே நாம்தான் காரணகர்த்தா,நாம் நம் இன்றைய வாழ்வை வடிவமைத்த சிற்பி.ஆங்கிலேய விஞ்ஞான அறிவு belief system....thought patterns.....action என்று கூறுகின்றது அதாவது நம்முடைய ஆழ்நம்பிக்கைகள் எண்ணங்களாக பின் எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன என்று வரையறுக்கின்றது.
நமது பலம் நம் மனம், நமது பலவீனம் அதை அறியாதிருப்பதேயாகும்.வாழ்க்கை எனும் கடலில் நம் கப்பல், காற்று அடிக்கும் திசையெல்லாம் போய்கொண்டிருக்கின்றது என்றால், மனம் எனும் பாய்மரத்தை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம் என்று அர்த்தம்.குறிப்பாக வாழ்க்கையில் விரக்தி FRUSTRATION,மன உளைச்சல் ANXITY,தோல்வி மனோபாவம்,தன்னம்பிக்கையின்மை ,
தாழ்வுமனோபாவம் INFERIORITY COMPLEX,அதிகாரமனோபாவம் SUPERIORITY COMPLEX, முற்சாய்வு PREJUDICE,தற்கொலை எண்ணங்கள் SUCCIDEL THOUGHTS,எண்ணச் சுழல்வு MOOD SWING இவை அடிக்கடி நம் மனதை தாக்கினாலோ அல்லது நம்மை தூண்டினாலோ நம் சிந்தனையில் எங்கோ தவறுகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன அல்லது மனோநிலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருகின்றன என்று நிச்சயமாக யூகித்துக்கொள்ளலாம்.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம் உங்களின் சூழல் ENVIRONMENTAL PRESURE,நண்பர்கள் வளையம் PEER PRESURE,கடந்தக்கால அனுபவ பதிவுகள் REGRESSION MEMORIES..இவைகள் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன,வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.இதற்கு சுய எண்ணப் பரிசோதனை SELF ANALYSIS செய்து வர இவற்றிலிருந்து விடுதலை பெறலாம் .
எண்ணங்கள் சரியாக செயல்பட்டால் வாழ்க்கை பூஞ்சோலையாக மாறும் இல்லை என்றால் போராட்டமே வாழ்க்கையாகிவிடும்...அது உங்களின் கைகளில்தான் உண்டு.!!!!

Tuesday, July 12, 2011

இந்திய சீனப்போரை நிறுத்திய மகரிஷி மகேஷ்யோகி







1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது.சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர்.அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,

“போரின் காரணமாக என் நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது.உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,

“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.

Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.



இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதியைச் சந்தித்து,

“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது.எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.



உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார்.சென்று,

“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.



பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.



இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார்.

Monday, July 11, 2011

success and satisfaction


Success will never arrive buy luck its purely will happen by law...Western theory says one can achieve success by cultivating an individual mind pattern whereas Eastern theory says the same but in addition it includes another important factor which many are unaware about it. The right way of using the mind, he may acquire success and ...achieve whatever he desired but definitely another important element will be missing indeed. What is the 99.9% missing element in human life??SATISFICATION!!!!!

Externally there are many successful people luxurious house, car unlimited bank balance and so on but then within them they are missing so much of inner peace and harmony, to many unwanted struggles emotional defects. Victory means not just win over the materialistic reality but also psychological too.Many have train the mind to move outward to attain wealth but fail to train the same mind to achieve the satisfaction and inner harmony,therefor the equilibrium has dropped and struggling remains, though they are so called rich.

The Eastern theory well explain that one has to prepare towards the both dimension.The teachings of our great yogis are not only to train the individual physically but also psychologically too......

வெளியே பெரிய பெரிய கார், பங்களா ,புகழ், கௌரவம் எல்லாம் உண்டு, உள்ளே துக்கம் துயரம் சோகம் மனஉளைச்சல் போன்ற குப்பைகளும் உண்டு.....இது எப்படி வெற்றி ஆகும் ???