You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Friday, December 2, 2011

Remedial guide for womans health...


அடியேனின் தாத்தா வைத்திருந்த ‘அகஸ்த்தியர் வைத்திய காவியம் 1500” எனும் நூலில் இருந்து ஒரு அற்புதமான கர்ப்பக்கோள் மருத்துவ குறிப்பு...பெண்களுக்கு ஏற்படும் 6 வகையான கர்ப்பப் பை பிரச்சனைகளை இதில் குறிப்பிடுகிறார்....கவியை பார்த்து விட்டு பின் பொருள் வகைகளை விவரிக்கின்றேன்..

புகலுகின்றேன் முதல்தரந்தான் மலடி யென்றாற்
பெண்ணுக்குக் கருக்குழித்தான் விலக்க மற்று
அகலுகின்றேன் அகலாத பாச{பாசி} பற்றி
அடைந்திருந்த விந்துவங்கே அணுகா தப்பா
நெகலுகின்றேன் மறுப்படித்தான் கருக்குழி வாயு
நிறைந்திருந்தால் விந்துவங்கே நேர்ப் டாது
தகலுகின்றேன் பின்னுமந்தக் கருக்குழியில் மைந்தா
தசைவளர்ந்தால் விந்துவங்கே தான்செல் லாதே


செல்லாது நாலாவது தப்பா கேளு
ஸ்திரீகளுக்குக் கருக்குழியில் கிருமி மொய்த்தால்
செல்லாது அஞ்சாவ தப்பா நீகேள்
செறிந்தாங்கே சோரைநிறந்திந் திருந்தாலும்
செல்லாது ஆறாவது தப்பா சொல்வோம்
திரண்டுதிசை மதத்திருக்கில் விந்து தானும்
செல்லாது இவையாறும் வியாதியாகும்
செப்பக்கேள் விரோதமே ழாகுங் காணே...

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வியாதிகளை பற்றி அகஸ்தியர் தன் பாடலில் சில முக்கிய குறிப்புக்களை கூறுகிறார்.....முதலில் பெண்களுக்கு மலடு அல்லது அதை சார்ந்த பிரச்சனைகளை ஆறு விதமாக உள்ளது என்று பிரிக்கிறார்.

1] “கருக்குழித்தான் விலக்கமற்று அகலுகின்றேன் அகலாத பாச பற்றி”
கருப்பப்பையில் பாசி படர்ந்திருக்கும் நிலையை பற்றி சொல்கின்றார் {FUNGUS INFECTION} இது முதல் தர மலட்டு தன்மையை உண்டாக்கும்.

2] “மறுப்படியும் கருக்குழி வாயு நிறைந்திருந்தால் விந்துவங்கே நேர்படாது”
கருப்பை பையில் வாயு என்னும் காற்று நிறைந்திருந்தால் அல்லது அபான வாயு சரியானப்படி பிரியாமல் இங்கே தங்குவது..பொதுவாக மாதவிடாய் இவர்களுக்கு சரியான தேதியில் காணாது....இது இரண்டாவது நிலை மலட்டு தன்மையாகும்

3] “பின்னுமந்தக் கருக்குழியில் மைந்தா தசைவளர்ந்திருந்தால் விந்துவங்கே தான் செல் லாதே....”
கருப்பைபையில் சதை வளர்ந்திருந்தால் விந்து செல்வதற்கு தடைஏற்படும்....இது சதைக் கட்டிகள் வகைகளாக்கூட இருக்கும்...{Growth,cyst,fibroids,tumour types of tissues} இது மூன்றாவது வகையை சார்ந்த மலடை உண்டாக்கும் நிலையாகும்..

4] “ஸ்திரீகளுக்கு கருக்குழியில் கிருமி மொய்த்தால்.....”
கருப்பை பையில் கிருமிகள் இருந்தால் உள்ளே செல்லும் விந்து சாகும் அல்லது பலம் இழந்துப்போகும்....{ germs,bacterias}

5] “செறிந்தாங்கே சோரை நிரைந்திருந்தா லுந்தான்....”
கர்பப்பையில் கொழுப்புடன் சேர்ந்த பழைய ரத்தக்கட்டிகள் நிறைந்திருந்தால் ஐந்தாவது நிலை மலட்டுதன்மையாகும்

6] திரண்டுதிசை மதத்திருந்தால் விந்து தானுஞ் செல்லாது...
ஆறாவதாக கருப்பப்பை வீக்கம் கண்டிருந்தாலோ அல்லது தடித்திருந்தாலோ விந்து செல்லாது...

எந்தவகையான பிரச்சனைகளுக்கும் தீர்வையும் அவர் கொடுக்கிறார், தாய்மார்கள் சகோதரிகள் பயன்படுத்தி தீர்வுக்காணுங்கள்....இந்த வைத்திய முறையை கையாளும் பொழுது கண்டிப்பாக பத்தியம் கடைபிடித்தல் வேண்டும்...முக்கியமாக புளி நீக்கிய உணவு, காரம் மற்றும் மாமீச வகைகள் இல்லாமல் இருந்தல் அவசியம்...மருந்து சாப்பிடும் காலம் வரை.

வில்வ இலை 500 கிராம்
வல்லாரை இலை 500 கிராம்
தூதுவிலை 500 கிராம்
மாவிலைக்கொழுந்து 500 கிராம்
அரசமரக்கொழுந்து 500 கிராம்
அசோக மரக் கொழுந்து 500 கிராம்

இவைகள் அத்தனையையும் நன்றாக அலசி நிழலில் காயவைத்து பின் நன்றாக அரைத்து ஒரு வேஷ்டி துணியில் சலித்து வைத்துக்கொண்டு,காலை மாலை வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிட்டுவரவும்.இந்த மருந்தை உட்கொள்ளும் வேளையில் சோற்றுக்கற்றாலை JELLY ஐ ஏழு தடவை நீரில் அலசி பின் ஒரு மேஜைக்கரண்டி அளவு தினமும் சப்பிட்டு வர கர்ப்பப்பையில் இருக்கும் சூடு நீங்கும் ...குருவருளால் கருப்பப்பை சிக்கல்கள் தீரும் மற்றும் பெண்களுக்கு எற்படும் மாதாந்திர தீட்டும் சரியாகும்..
இதனுடன் சேர்த்து PENANG BEACH STREET ல் உள்ள கோட்டைக்கல் ஆயுர்வேத ஆரிய வைத்திய சாலையில்

1] கதிராரிஷ்டம்
2] தசமூலாரிஷ்டம்
3] அசோக்கிருதம்

இவைகள் மூன்றும் TONIC வைகையை சார்ந்தது...உப சாந்தி மருந்தாக பயன் படுத்தி வந்தால் ஆரம்ப நிலை கர்பப்பை புற்றுநோயையும் தவிர்க்கலாம்

இதை செய்யும் காலத்தில் குலதெய்வ வழிப்பாடும் மூதாதையர்கள் வழிப்படும் செய்து வருவது சிறந்த பலனைத்தரும்.மேலும் SEREMBAN TOLL அருகில் இருக்கும் மலையில் சப்தகன்னிமார்கள் சன்னிதானம் உண்டு, இங்கே சென்று அவர்களுக்கு 7 வர்ணத்துணி 7 மாலை மற்றும் மஞ்சள் குங்குமம் வளையல்கள் வைத்து பௌர்ணமி அன்று வழிப்பட்டால் குழந்தை பேறு கட்டாயம் கிடைக்கும்..திருமணமும் கைக்கூடிவரும்..அனுபவத்தில் கண்டது....உள்ளத்தில் உண்மையான பக்தி..உள்ள உருக்க பிராத்தனை நிச்சயம் பலனளிக்கும்.
சித்தர்களின் திருவடிகள் வாழி.
வள்ளிமலைகுருநாதன் துணை..

Intramural fibroid,submucous fibroid,subserosal fibroid ,polyp, uterus myoma,cervical erosin and ovarian cyst are the common types of womb problems which most of the females are facing currently.All this complications was elaborated wisely by Siddhar Agastiar in his text called “AGASTIYAR VAITHIYA KAAVIYAM 1500”...

No comments:

Post a Comment